Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Niroshini / 2016 ஜூலை 24 , பி.ப. 12:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
வீதி கடுமையாகச் சேதமடைந்திருப்பதன் காரணமாக முல்லைத்தீவு கரைதுறைபற்றின் மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் ஆகிய கிராமங்களின் மக்கள் போக்குவரத்து நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளதாக கரைதுறைபற்றுப் பிரதேச செயலாளர் சி.குணபாலன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இரட்டை வாய்க்காலில் இருந்து சாலை வரையான பதின்மூன்று கிலோமீற்றர் சேதமடைந்திருப்பதன் காரணமாக இப்பகுதிக்கான பஸ் பணிகள் இடம்பெறுவதில்லை. இவ்வீதி புனரமைப்பதற்கான திட்டமொன்றுக்குள் உள்ளடக்கப்பட்டிருப்பதன் காரணமாக விரைவில் வீதி புனரமைக்கப்படவுள்ளது. அதன் பின்னர் போக்குவரத்துப் பிரச்சினை மேற்படி கிராமங்களுக்கு இருக்காது.
தீர்த்தக்கரை, கள்ளப்பாடு, தியோகுநகர், போன்ற உள்ளூர் பஸ் பணிகள் இலாபம் இல்லாமை காரணமாக பஸ் பணிகள் இடம்பெறுவதில்லை. ஆனால், மக்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் பஸ் பணிகளை கிராமங்களுக்கு நடாத்தி வருகின்றோம். ஆனால், தியாகுநகர் போன்ற கிராமங்களிலிருந்து பஸ் பணிகளை நடாத்துங்கள் என்ற கோரிக்கை மக்களிடமிருந்து கிடைக்கவில்லை என தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago
7 hours ago