2025 ஜூன் 30, திங்கட்கிழமை

பாடசாலைக்கு குடிநீர்த்தாங்கி; காசோலை கையளித்தால் டெனிஸ்வரன்

Menaka Mookandi   / 2016 ஜனவரி 28 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

பண்டிவிரிச்சான் பாடசாலையில் அமைக்கப்பட்ட குடிநீர் தாங்கித் தொகுதிக்கான காசோலை வழங்கும் நிகழ்வு, நேற்று புதன்கிழமை இடம்பெற்றது.

மடு கல்வி வலயத்துக்கு உட்பட்ட பண்டிவிரிச்சான் பாடசாலைக்கு குடிநீர் தாங்கி அமைப்பதற்கு வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது 2015ஆம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியில் இருந்து 2,50,000 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.

ஏற்கெனவே, கடந்த ஆண்டுத் திட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில் அதற்கான காசோலையினை புதன்கிழமை காலை, மன்னார் மாவட்டத்தில் உள்ள அமைச்சரின் உப அலுவலகத்தில் வைத்து பாடசாலையின் பிரதி அதிபரிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார் அமைச்சர் டெனிஸ்வரன்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X