Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Kogilavani / 2015 நவம்பர் 25 , மு.ப. 03:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சன்முகன் தவசீலன்
மன்னாரில் பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.
மன்னாரில் பல புகையிரத கடவைகளில் பாதுகாப்பான வீதி தடைகள் போடப்படாததால் குறித்த புகையிரத கடவைகளை கடந்து செல்வது பாதுகாப்பற்று காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
நாட்டின் பலபாகங்களிலும் இவ்வாறான பாதுகாப்பற்ற கடவைகள் இல்லாத நிலையில் பல உயிரிழப்புக்கள் இடம்பெற்றுள்ளன.
இவ்வாறான நிலை மன்னாரிலும் தொடராது இருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவிக்கும் மக்கள் விபத்துக்களையும் வீணான உயிரிழப்புக்களையும் தவிர்த்துக் கொள்ள சம்பந்தப்பட்ட நிர்வாகங்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டு கோள்விடுக்கின்றனர்.
குறிப்பாக மன்னாரில் பட்டிதோட்டம்இ தாராபுரம் உள்ளிட்ட பல இடங்களில் இதுவரையில் பாதுகாப்பான வீதிதடைகள் போடப்படவில்லை.
குறிப்பாக மன்னார் தாழ்வுபாடு வீதியில் பட்டிதோட்டம் (டிப்போ) பகுதியில் புகையிரத பாதை குறித்த வீதியை ஊடறுத்து செல்லுகிறது. அப்பகுதியில் வீதியையும் புகையிரத பாதையையும் இணைக்கும் பகுதியில் வீதிதாழ்வாக இறங்கியுள்ளது.
இதனால் இவவீதியூடாக வாகனங்கள் பயணிப்பதில் சிரமங்களை எதிர்கொள்வதாக சாரதிகள் தெரிவிக்கின்றனர். எனவே இதனையும் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தபட்ட திணைக்களத்தை கோரி நிற்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
1 hours ago