Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
George / 2016 மே 17 , மு.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் மாவட்டத்தில், திங்கட்கிழமை அதிகாலை வீசிய கடும் காற்றின் காரணமாக பேசாலை கடற்கரை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல றோலர் படகுகள் சேதமாகியுள்ள நிலையில், பாதிப்பு குறித்து அவசர கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
பேசாலை புனித வெற்றி நாயகி ஆலய மண்டபத்தில் வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா தலைமையில் திங்கட்கிழமை மாலை இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
சுமார் 47 டோலர்கள் கற்றினால் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், சுமார் 30 படகுகள் பலத்த சேதங்களுடன் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதுடன் 17 படகுகள் இது வரை கண்டுபிடிக்கப்படவில்லை என கலந்துiராயடலில் கலந்துக்கொண்ட மீனவர்கள் தெரிவித்தனர்.
அதனையடுத்து, பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உடனடியாக நட்டஈட்டை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் ஆலோசிக்கப்பட்டன.
வடமாகாண முதலமைச்சர், மீன்பிடி அமைச்சர் ஆகியோருக்கு பிரச்சினைகள் பற்றி தெரியப்படுத்தி பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உடனடியாக நட்ட ஈட்டை பெற்றுக்கொடுப்பது என இந்தக்கலந்துரையாடலின் முடிவில் தீர்மானிக்கப்பட்டது.
மேலும் மீனவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து உரிய பொலிஸ் முறைப்பாடுகளை மேற்கொள்வது எனவும் கலந்துரையாடலில் கலந்துகொண்டவர்கள் தீர்மானித்துள்ளனர்.
அவசர கலந்துரையாடலில் மன்னார் பிரதேசச் செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார், அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மாவட்ட இணைப்பாளர் முஹமட் றியாஸ்,பேசாலை பங்குத்தந்தை பெனோ அலெக்சான்டர் சில்வா, பேசாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
1 hours ago