2025 ஜூன் 30, திங்கட்கிழமை

பூநகரி பிரதேச மருத்துவமனையில் தொடரும் நீர் நெருக்கடி

Princiya Dixci   / 2016 மே 08 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி, பூநகரி பிரதேச மருத்துவமனையில் தொடரும் நீர் நெருக்கடியினால் மருத்துவமனையில் நோயாளர்களை தங்கவைத்து சிகிச்சை அளிக்க முடியாத நிலையில் கிளிநொச்சி பொது மருத்துவமனைக்கு நோயாளர்கள் அனுப்பப்பட்டு வருகின்றனர்.

கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் பூநகரி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பூநகரி மருத்துவமனையின் மருத்துவரால் மருத்துவமனையில் நீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதன் காரணமாக நோயாளர்களை தங்கவைத்து சிகிச்சையளிக்க முடியாத நிலையில் கிளிநொச்சி பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

தற்போதும் நோயாளர்கள் கிளிநொச்சிக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். இம்மருத்துவமனைக்குரிய குடிநீர் மட்டும் பூநகரி பள்ளிக்குடாவிலிருந்து நாள்தோறும் 1000 லீற்றர் எடுத்துவரப்படுவதாகவும் மருத்துவமனையால் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனையிலுள்ள திறந்த கிணற்றுநீர் பயன்படுத்த முடியாத அளவிற்கு நிறம் மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X