2025 ஜூன் 30, திங்கட்கிழமை

புனர்வாழ்வுப் போராளிகளுக்கான வாழ்வாதாரத் திட்டத்துக்கான பதிவுகள் ஆரம்பம்

Princiya Dixci   / 2016 ஜனவரி 29 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

புனர்வாழ்வு பெற்ற போராளிகள், வாழ்வாதாரத் திட்டத்துக்கான பதிவுகளை தற்போது மேற்கொள்ளலாம் என வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா. டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களம், கடந்த ஆண்டு ஆரம்பித்த புனர்வாழ்வு பெற்ற போராளிகள், யுத்தத்தில் தமது பிள்ளைகளை பறிகொடுத்த பெற்றோர்கள், தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்கள் ஆகியோருக்கான வேலைத்திட்டமானது, சிறப்பான முறையிலே நடைமுறைப்படுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து புதிதாக தமது பதிவுகளை மேற்கொள்ளாமல் தவறவிட்டவர்களுக்காக இந்த ஆண்டும் தமது பதிவுகளை மேற்கொள்வதற்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. 

எனவே, மேற்படி நபர்கள் தற்போது தத்தமது பிரதேச செயலகங்களில் இருக்கின்ற கிராம அபிவிருத்தி உத்தியோகத்தரிடமிருந்து விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ள முடியும்.

அவ்வாறு படிவங்களை பெற்றவர்கள் சரியான முறையில் அதனை பூரணப்படுத்தி தம்மிடம் இருக்கின்ற ஆவணங்களின் நிழல் பிரதியையும் இணைத்து தமது கிராமங்களில் இருக்கின்ற கிராம அபிவிருத்தி சங்கம் அலல்து மாதர் அபிவிருத்தி சங்கம் மற்றும் கிராம சேவையாளரிடம் ஆகியோரிடம்  உறுதிப்படுத்தி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 29ஆம் திகதிக்கு முன்னதாக தமது கிராம அபிவிருத்தி உத்தியோகத்தரிடம் ஒப்படைத்து ஒப்படைத்தமைக்கான் பற்றுச் சீட்டையும் அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

படிவங்களின் விவரம் 
படிவம் 01 - புனர்வாழ்வு பெற்ற போராளிகளுக்கான படிவம்.
படிவம் 02 - பிள்ளைகளை இழந்தவர்களுக்கான படிவம்.
படிவம் 03 - தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கான படிவம்.
ஏனைய போராட்டக் குழுக்களில் இருந்து உயிர்த்தியாகம் செய்த நபர்களின் குடும்பங்கள் புதிய படிவமாகிய, படிவம் 04 இணை பூரணப்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

எனவே, கடந்த ஆண்டு தமது பதிவுகளை பதிவுசெய்யாது தவறியவர்கள் இந்த சந்தர்ப்பத்தை தவற விடாது விரைவாக தமது பதிவுகளை மேற்கொள்ளுமாறு வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X