2025 ஜூன் 30, திங்கட்கிழமை

பெருந்தொகை மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது

George   / 2016 ஏப்ரல் 26 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சி உதயநகர்ப் பகுதியிலுள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 175 மில்லிலீற்றர் கொள்ளவுள்ள 325 மதுபான போத்தல்கள் மற்றும் 25 டின்பியர் என்பன கிளிநொச்சி மாவட்ட விசேட மது ஒழிப்புப் பொலிஸாரால் இன்று செவ்வாய்க்கிழமை (26) கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன், சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.  

ரகசிய தகவலுக்கமைய, விசேட மது ஒழிப்புப் பொலிஸ் பிரிவின் பொறுப்பாளர் பாலித சிறிவர்த்தனவின் கட்டளைக்கு அமைவாக, வீ.எஸ்.லால், டி.சி.சியான், டி.சி.அழகேசன் ஆகியோர் உள்ளடங்கிய குழுவினர், இந்த மதுபான போத்தல்களை கைப்பற்றினர்.

அனுமதிப்பத்திரமின்றி, விற்பனை செய்யும் நோக்கில் வைக்கப்பட்ட மதுபானப் போத்தல்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X