2025 ஜூன் 30, திங்கட்கிழமை

பகலில் பஸ் வேண்டும்

Menaka Mookandi   / 2016 ஏப்ரல் 21 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி, பூநகரி, கௌதாரிமுனைக் கிராமத்திற்கு நண்பகலில் பயணிக்கக்கூடியவாறு அரச பஸ்ஸை சேவையிலீடுபடுத்துமாறு கௌதாரிமுனை கிராம அபிவிருத்திச் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கிளிநொச்சியிலிருந்து மாலை 5 மணிக்கு கிராமத்திற்குள் வருகைதரும் அரச பஸ் மறுநாட்காலை 7 மணிக்கு கிளிநொச்சியினை நோக்கி பயணிக்கின்றது. வேறு நேரத்தில் சேவைகள் இல்லை. இதன் காரணமாக போக்குவரத்திலீடுபடுவதில் மக்கள் இடர்களை எதிர்கொண்டுள்ளனர்.

107 குடும்பங்கள் மீளக்குடியமர்ந்துள்ள இக்கிராமத்தில் பூநகரிப் பிரதேச மருத்துவமனை, பூநகரிப் பிரதேச செயலகம், கிளிநொச்சி மாவட்டச் செயலகம், கிளிநொச்சி பொது மருத்துவமனை ஆகியவற்றிற்குச் செல்வதில் இக்கிராம மக்கள் இடர்களை எதிர்கொண்டுள்ளனர்.

குறிப்பாக வினாசியோடை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் இக்கிராமத்திலிருந்து பூநகரி நகரத்திற்கோ கிளிநொச்சி நகரத்திற்கோ பயணிக்கமுடியாத நிலையில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் நண்பகலில் அரச பஸ் ஒன்று இக்கிராமத்திற்குள் வந்துசெல்லக்கூடிய வகையில் ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளிடம்; இக்கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X