2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

பனை வடலிகள் எரிந்து நாசம்

Princiya Dixci   / 2016 மே 09 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி, பூநகரியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) பற்றைக்கு வைத்த தீ பனைங்கூடலில் பரவியதில் சுமார் 100 பனை வடலிகள் மற்றும் பனைகள் எரிந்து நாசமாகியுள்ளன.

பூநகரிப் பிரதேசம் உவரடைந்து வரும் பிரதேசம். உவர் பரம்பலைத் தடுப்பதில் பனை மரங்களுக்கு பெரும் பங்குண்டு. இந்நிலையில் பாதுகாக்கப்பட வேண்டிய பனை வளம் தீயினால் எரியுண்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திலும் கரைச்சி, கண்டாவளை, பளை, பூநகரி பிரதேச செயலகங்களிலும் நடைபெறும் கூட்டங்களில் கிளிநொச்சி மாவட்டத்தில் பனைவளம் அழிக்கப்பட்டு வருவதாகவும் அதனைக் காப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தற்போது வரட்சியான சூழலில் தீ மூட்டுபவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென அதிகாரிகளினால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X