Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Princiya Dixci / 2016 ஜனவரி 12 , மு.ப. 07:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
பல இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாப்பொதியுடன் இளைஞனொருவரை, கிளிநொச்சியில் வைத்து திங்கட்கிழமை (11) இரவு 11 மணியளவில் மன்னார் மாவட்ட விசேட போதைவஸ்து குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
மன்னார் மாவட்ட விசேட போதைவஸ்து குற்றத்தடுப்பு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து உப பொலிஸ் பரிசோதகர் எச்.எம்.யூ.ஹேரத் தலைமையில் பொலிஸ் சாஜன் கமகே (25405), பொலிஸ் கொஸ்தபிள்களான விக்கிரமசிங்க (33158), ரத்னாயக்க (74157), சசிக்குமார் (89049), சுமித்(35802), ஸ்ராலின் (5938) மற்றும் உப்புள்(16511) ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழுவினர் துரித கதியில் செயல்பட்டு குறித்த கேரள கஞ்சாவை மீட்டுள்ளதோடு சந்தேகநபரையும் கைதுசெய்துள்ளனர்.
மீட்கப்பட்ட இரு கஞ்சாப்பொதிகளும் 04 கிலோகிராம் எடை கொண்டது என மன்னார் மாவட்ட விசேட போதைவஸ்து குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இலுப்பைக்கடவைப் பகுதியில் வைத்து குறித்த நபரை, கைதுசெய்ய முற்பட்ட போதும் அவர் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற போது கிளிநொச்சிப் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
34 minute ago
37 minute ago
2 hours ago