2025 ஜூன் 04, புதன்கிழமை

புதிய பாலம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது

Editorial   / 2018 செப்டெம்பர் 04 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி, இராமநாதபுரம் புதுக்காடு கிராமத்தில் வெற்றிப்பாதை சனசமூக நிலையத்திற்கு அருகாமையில் புதிய பாலமொன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

கடந்த 29ஆம் திகதி கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதனினால், குறித்த அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இப்பகுதியில் வாழ்கின்ற மக்களின் போக்குவரத்திற்காக அமையவுள்ள குறித்த பாலமானது மிக முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. இத்துடன் இது கரைச்சி பிரதேச சபையின் நிதியினால் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .