2025 ஜூன் 02, திங்கட்கிழமை

‘பூரண ஆதரவு’

Editorial   / 2018 ஓகஸ்ட் 26 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட், . அகரன்

மகாவலி அபிவிருத்தி என்ற போர்வையில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட பெரும்பான்மையினக் குடியேற்றங்களை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து, அவர் நேற்று விடுத்துள்ள அறிக்கையில் "முன்மொழியப்பட்ட மகாவலி 'K', 'J' வலயங்கள் ஊடாக, வடக்கின் பெரும்பகுதி காணி அதிகாரம், மகாவலி அதிகாரசபையின் கீழ் செல்லக்கூடிய அபாயநிலை தோன்றியுள்ள நிலையில், காணி அதிகாரங்கள் பறிக்கப்பட்டதன் பின்னர், இனப்பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படுவதானது, உப்புச்சப்பற்றதாகவே இருக்கும்" என, அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, தமிழர்களுக்கு எவ்விதத்திலும் பயன்படாத மகாவலித் திட்டத்தை, முழுமையாக நிராகரிப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X