2025 ஜூன் 30, திங்கட்கிழமை

மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வு

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 07 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

- வி.தபேந்திரன்

யாழ்ப்பாண லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் 150 முதியவர்களுக்கு மூக்குக்கண்ணாடிகள் வழங்குதல் மற்றும் மருத்துவ சேவை வழங்கல் நிகழ்வு, வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தில் எதிர்வரும் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 09 மணிக்கு நடைபெறவுள்ளது.

மாவட்ட முதியோர் அபிவிருத்திப் பேரவை அங்கத்தவர்களின் பூரண ஒத்துழைப்புடன் மாவட்ட சமூக சேவைகள் அலுவலகத்தால் இவை ஒழுங்குபடுத்தப்படுகின்றன.

இது தொடர்பான மேலதிக விவரங்களை, மாவட்ட சமூக சேவைகள் அலுவலகத்தின் 0213215529 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு அறிய முடியும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X