2025 ஜூன் 30, திங்கட்கிழமை

முக்கொம்பனுக்கான பஸ் சேவை இடைநிறுத்தம்

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 10 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நடராசா கிருஸ்ணகுமார்

ஸ்கந்தபுரத்திலிருந்து பூநகரியின் முக்கொம்பன் கிராமத்துக்கு நடத்தப்பட்ட வந்த இலங்கை போக்குவரத்துச் சபையின் பஸ் சேவையானது வீதி சீரின்மை காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் கிளிநொச்சி சாலை அறிவித்துள்ளது.

ஸ்கந்தபுரத்திலிருந்து முக்கொம்பனுக்குச் சென்ற பஸ்கள் கடந்த இரண்டு நாட்களாக சேற்றில் புதையுண்டமையால் இச்சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதனால், ஸ்கந்தபுரத்திலிருந்து முக்கொம்பன் செல்லும் பயணிகள் கிளிநொச்சி நகரிலிருந்து பரந்தன் வழியாக பூநகரி நோக்கிச் செல்லும் பஸ்ஸில் பயணங்களை மேற்கொண்டு, தொடர்ந்து அங்கிருந்து பூநகரியின் 10 ஆம் கட்டை வழியாக முக்கொம்பன் செல்லும் பஸ்ஸில் பயணிக்கலாம் என சாலை அறிவித்துள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X