Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Princiya Dixci / 2016 மே 11 , மு.ப. 07:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியா, பிரமணாளங்குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர், இன்று புதன்கிழமை (11) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வவுனியா, சாளம்பைக்குளத்தைச் சேர்ந்த நூர்முகமது கலீல் காமின் என்ற 25 வயதுடைய இளம் குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக உறவினர்கள் தெரிவிக்கையில்,
உயிரிழந்த நபர், அவரது சகோதரர்கள் மற்றும் மைத்துனர்களுடன் நேற்று செவ்வாய்க்கிழமை (10) இரவு, மீன்பிடிப்பதற்காக பிரமணாளங்குளத்துக்குச் சென்றிருந்தனர்.
இதன்போது, மைத்தனர் ஒருவருடன் சேர்ந்து காமின், பாரஊர்தியின் டியூப் ஒன்றில் ஏறி குளத்துக்குள் இறங்கிய போது அந்த டியூப்பில் துவாரம் ஏற்பட்டு, காற்று வெளியேறியமையால் மைத்துனர் நீந்திக்கரை சேர்ந்த போதிலும் காமினுக்கு நீச்சல் தெரியாத காரணத்தால் குளத்தினுள் மூழ்கி அவர் உயிரிழந்தார் எனத் தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று (11) காலை, அப்பிரதேச பொதுமக்கள் மற்றும் பிரமணாளங்குளம் பொலிஸார் இணைந்து சடலத்தை மீட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை, பிரமணாளஙகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
50 minute ago