2025 ஜூன் 30, திங்கட்கிழமை

மின்விளக்குகள் ஒளிராததால் பெண்களுக்கு சிரமம்

Gavitha   / 2016 பெப்ரவரி 05 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரிய கடை கிராமத்திலுள்ள தெருக்களுக்கு, மின்விளக்குள் இல்லாமையால் அப்பகுதியிலுள்ள கிராம மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக, பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

பெரிய கடை கிராமத்தில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றன. குறித்த கிராமத்தில் மது விற்பனை நிலையம் ஒன்றும் அமைந்துள்ளது.

இந்நிலையில் இரவு நேரங்களில் மது விற்பனை நிலையத்துக்கு வந்து மதுவை கொள்வனவு செய்வோர், கிராமங்களில் இருளாக இருக்கும் பகுதிகளுக்குச் சென்று, அங்கு அமர்ந்து மது அருந்துவதனால், அங்குள்ள பெண்கள் அவசரத் தேவைக்காக கூட வெளியில் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனினும், மது விற்பனை நிலையம் அமைந்துள்ள பிரதான வீதியில் மாத்திரம் தெரு மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.

பல தெருக்களில் மின் கம்பங்களில் மின் விளக்குகள் காணப்படுகின்ற போதும் அவை ஒளிர்வதில்லை.

இந்த பிரச்சினை தொடர்பில், பெரியகடை கிராம அலுவலகர் ஊடாக மன்னார் நகர சபைக்கு பல முறை தெரியப்படுத்தியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே இந்த பிரச்சினையை உரிய தரப்பினர் கவனத்தில்  கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று, பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X