2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

மீனவர்கள் வெளியேறினால் நம்பிக்கை ஏற்படும்

Menaka Mookandi   / 2016 ஏப்ரல் 04 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு, நாயாற்றில் அனுமதியற்ற தொழிலில் ஈடுபட்டிருக்கும் தென்னிலங்கை கடற்றொழிலாளர்களை வெளியேறினால் தான் அமைச்சின் நடவடிக்கைள் மீது நம்பிக்கையேற்படும் என முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியராசா தெரிவித்தார்.

நாயாற்றில் அனுமதியற்ற முறையில் தொழிலில் ஈடுபடும் தென்னிலங்கை கடற்றொழிலாளர்களை வெளியேற்றுமாறு கடற்றொழில் திணைக்களத்துக்கு அமைச்சர் மஹிந்த அமரவீர சனிக்கிழமை (02) உத்தரவிட்டுள்ளார்.  இது தொடர்பாக சமாசத் தலைவர் கருத்துத் தெரிவிக்கையில்,

மீள்குடியேற்றத்தின் பின்னர் 78 தென்னிலங்கை கடற்றொழிலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அனுமதியில்லாமல் 278 கடற்றொழிலாளர்கள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுகின்றனர்.

இவ்வாண்டில் மட்டும் 178 கடற்றொழிலாளர்களுக்கு கடற்றொழில் திணைக்களம் அனுமதிகளை வழங்கியது. உண்மையில் தென்னிலங்கையைச் சேர்ந்த 78 பேர்தான் நாயாற்றில் தொழில்புரிய வேண்டும். அனுமதியற்ற மீன்பிடியாளர்களை தொழிலில் ஈடுபடவேண்டாமென்பது தான் எமது கோரிக்கை.

இது தொடர்பாக கடந்த அரசிலும் தற்போது நல்லாட்சி அரசிலும் வலியுறுத்தி வருகின்றோம். கடற்றொழில் அமைச்சர் எடுத்த தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படும் போது தான் நம்பிக்கைகள் ஏற்படும். நடவடிக்கைகளை எதிர்பார்த்திருக்கின்றோம் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X