2025 ஜூன் 30, திங்கட்கிழமை

மே 1 முதல் இணைந்த நேர அட்டவணை அமுலாகின்றது

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 20 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன், எஸ்.என். நிபோஜன் 

வடக்கு மாகாண மக்களின் போக்குவரத்தை சிறந்ததும் பாதுகாப்பானதுமாக வழங்குவதற்காக எதிர்வரும் மே மாதம் 1ஆம் திகதி முதல் வடமாகாண தனியார் பஸ் சேவையினருக்கும் இலங்கை போக்குவரத்துச் சபையினருக்கும் இடையில் இணைந்த நேர அட்டவணை அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் தலைமையில் யாழ்ப்பாணத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (19) இரண்டு சேவையினருக்கும் இடையில் நடைபெற்ற குழுக்கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வடபிராந்திய தலைவர் கபரஹம, பிரதம கணக்காளர்கள்,  இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்தியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள், வட இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் மற்றும் அனைத்து மாவட்டங்களினதும் தனியார் பஸ் உரிமையாளர் சங்கங்களின் தலைவர்கள் இணைந்து இந்தக் கூட்டத்தை நடத்தினர்.

ஒரு சில வேண்டுகோள்களுக்கு இணங்க ஒரு சில சிறிய மாற்றங்களும் செய்யப்பட்டு இரு தரப்பினரதும் ஒப்புதலுடன் எதிர்வரும் மே மாதம் 01 ஆம் திகதி அமுலப்படுத்தவுள்ளதாகவும், அமுல்படுத்தியதன் பின்னர் இந்த நேர அட்டவணையின் ஒழுங்குகளைப் பின்பற்றாத பஸ்களின் நடத்துனர்கள், ஓட்டுனர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X