Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
George / 2016 மே 10 , மு.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
'கிளிநொச்சி மாவட்டத்தில் 90 வீதமான கால்நடைகள், திறந்தவெளிகளில் வைத்து பராமரிக்கப்படுகின்ற போதும், அவற்றுக்கான மேய்ச்சல் தரவைகள் இன்மையால் கால்நடைப் பண்ணையாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்' என கால்;நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் எஸ்.கௌரிதிலகன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 'விவசாயகத்தையும் கால்நடை வளர்ப்பையும் மிகமுக்கிய வாழ்வாதாரமாக் கொண்ட மாவட்டமாக கிளிநொச்சி மாவட்டம் காணப்படுகின்றது. கால்நடை வளர்ப்பை வாழ்வதாரமாகக் கொண்ட கால்நடை பண்ணையாளர்கள் தமது கால்நடைகளை, பயிர்ச் செய்கை காலங்களில் பராமரித்துக் கொள்வதற்காக மேய்ச்சல் தரவைகள் இல்லாத நிலை காணப்படுகின்றது.
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகளும், 7,000 வரையான ஆடுகளும், 2,000க்கும் மேற்படட எருமை மாடுகளும் உள்ளன.
இந்தக் கால்நடைகளை பயிர்ச் செய்கை காலங்களில் பராமரிக்கக் கூடிய மேய்ச்சல் தரவைகள் இல்லாத நிலையில் பண்ணையாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
திறந்தவெளி மேய்ச்சல் தரவைகளில் வைத்து கால்நடைகளை பராமரிப்பதால், அதிகமான இலாபம் கிடைக்கும். மாறாக உள்ளக வளர்ப்பு முறைகளுக்கு பண்ணையாளர்;களை மாற்;றுவதற்கு நீண்டகாலம் எடுக்கும். கிளிநொச்சி மாவட்டத்தில் மேய்ச்சல் தரவைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்கள் பயிர்ச் செய்கை நிலங்களாகவும் குடியிருப்பு நிலங்களாகவும் மாற்றப்பட்டுள்ளன.
ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தலா 100 ஏக்கர் நிலம் மேய்ச்சல் தரவைகளுக்கு ஒதுக்கப்;பட வேண்டும். மேய்ச்சல் தரவைகளை இனங்கண்டு அவற்றை பெற்றுக்கொள்வதற்கு வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிட்டு அவற்றை பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
1 hours ago