2025 ஜூன் 30, திங்கட்கிழமை

முறைகேடான வகையில் ஆசிரியர்களுக்கு நியமனம்

Niroshini   / 2016 மே 08 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி மாவட்டத்தில் தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்குவதற்கென கிளிநொச்சி வலயக் கல்விப் பணிமனையில் பெயர் விபரம் அடங்கிய பட்டியல் வெளிப்படுத்தப்பட்ட நிலையில், அப்பட்டியலில் முறைகேடான வகையில் பெயர் விபரம் இடம்பெற்றுள்ளதாக தொண்டர் ஆசிரியர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இப்பெயர்ப் பட்டியலில் 277 பேருடைய பெயர் விபரங்கள் அடங்கியுள்ள போதிலும், 200க்கு உட்பட்ட ஆசிரியர்களே தொண்டர் ஆசிரியர்களாக பாடசாலைகளில் பணிபுரிந்து வருவதாகவும் பாடசாலைகளுக்கு தொண்டர் ஆசிரியராக பணிக்குச் செல்லாதவர்கள் கூட தொண்டர் ஆசிரியர்களாக பணிபுரிந்ததாக பெயர்ப் பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதற்கு பாடசாலைகளிலுள்ள அதிபர்களே முக்கிய காரணமாகவுள்ளனர். பாடசாலைக்கு தொண்டர் ஆசிரியர்களாக பணிபுரியாதவர்களையும் தொண்டர் ஆசிரியர்களாக பணிபுரிந்தார்கள் என தவறாக பெயர் விபரங்களை வலயக் கல்விப் பணிமனைக்கு பெயர்களை வழங்கியமையும் முக்கிய காரணமாக உள்ளது.

பாடசாலைகளில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிக் கொண்டிருக்கும் தொண்டர் ஆசிரியர்களுடன் களவான முறையில் அதிபர்களின் துணையுடன் தொண்டர் ஆசிரியர்கள் என பெயர்களை பதிவு செய்தவர்கள் தொடர்பாக சம்பந்தப்பட்டோர் விசாரணைகளை நடத்தவேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X