Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Princiya Dixci / 2015 டிசெம்பர் 10 , பி.ப. 01:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
- சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு மாவட்டத்தில் பயிர்ச் செய்கை பண்ணப்பட்ட சுமார் 5,000 ஏக்கர் காணிகள் தற்போது தரிசு நில பற்றைக்காடுகளாக காணப்படுவதாக மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
துணுக்காய், மாந்தை கிழக்கு, ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு, கரைதுறைப்பற்று மற்றும் மணலாறு (வெலிஓயா) ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளில் கடந்த கால யுத்தம் காரணமாக பெருமளவான பயிர் செய்கை நிலங்கள் கைவிடப்;பட்டன. மேலும், விவசாயத்துக்கு உதவிய சிறிய குளங்கள் புனரமைக்கப்படாமலும் காணப்பட்டன. இதனால் பயிர்ச் செய்கைக்குட்படுத்தப்படாத நிலங்கள் பற்றைக்காடுகளாக மாறியுள்ளன.
கடந்த 2009ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் தொடக்கம் மக்கள் மீள்குடியேறியதையடுத்து சிறிய நீர்ப்பாசனக்குளங்கள் புனரமைக்கப்பட்டு வருவதுடன் பயிர்ச் செய்கை நிலங்கள் துப்பரவு செய்து விவசாயச் செய்கைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த வருடம் ஆயிரம் ஏக்கர் வரையில் துப்பரவு செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் ஐயாயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் துப்பரவு செய்;ய வேண்டியிருப்பதாகவும் மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஏற்கெனவே பல சிறிய குளங்கள் புனரமைக்கப்பட்டுள்ளபோதும் அதன் கீழ் உள்ள பயிர் செய்கை நிலங்களை விவசாயிகளுக்கு பிரித்து வழங்குவதிலும் துப்பரவு செய்து பயிர் செய்கைக்கு உட்படுத்துவதற்கும் வனவள திணைக்களம் அனுமதிகளை வழங்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
1 hours ago