2025 ஜூன் 30, திங்கட்கிழமை

முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிமனை திறப்பு

Menaka Mookandi   / 2016 ஜனவரி 27 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு நகரில் அமைக்கப்பட்ட முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிமனை வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜாவால் இன்று புதன்கிழமை (27) திறந்து வைக்கப்பட்டது.

1990 ஆண்டு இடம்பெயர்வுக்கு முன்னர் இந்தக் கல்வி வலயம் முல்லைத்தீவு சிறி சுப்பிரமணியம் வித்தியாசாலையில் இயங்கியது. பின்னர் 2002ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து மீண்டும் அதே இடத்தில் இயங்கிய நிலையில், 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில், பணிமனை முற்றாக அழிவடைந்தது.

தொடர்ந்து, புனரமைக்கப்பட்ட கட்டடத்தில் இயங்கிய பணிமனை, இறுதி யுத்தத்தில் மீண்டும் அழிவைச் சந்தித்தது. அனைத்து ஆவணங்களும் இதன்போது அழிவடைந்தன.

தொடர்ந்து 2009ஆம் ஆண்டு மீள்குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் இயங்கி வந்தது. இந்நிலையில் தற்போது புதிய கட்டடம் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் வடமாகாண சபை பிரதி அவைத்தலைவர் எம்.அன்ரனி ஜெகநாதன், முல்லைத்தீவு மாவட்டச் செயலர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், வலயக் கல்விப் பணிப்பாளர் உ.முனீஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X