2025 ஜூன் 30, திங்கட்கிழமை

முல்லை. மாவட்டத்தின் பல தேவைகளை நிவர்த்திசெய்ய வேண்டும்

Menaka Mookandi   / 2016 ஜனவரி 28 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

யுத்தத்தினாலும் ஆழிப்பேரலையினாலும் அதிக பாதிப்புக்களை எதிர்கொண்ட மாவட்டமாக காணப்படும் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல தேவைகள், நிறைவு செய்யப்பட வேண்டியுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு வலயக்கல்வித் திணைக்களத்தின் புதிய கட்டடத்திறப்பு விழா நிகழ்வு புதன்கிழமை (27) பிற்பகபல் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், 'முல்லைத்தீவு மாவட்டமானது கடந்த கால யுத்தத்தினாலும் ஆழிப்பேரலை அனர்த்;தத்தினாலும் பாதிக்கப்பட்ட ஓர் மாவட்டமாக காணப்படுவதுடன். அதனுடைய, தாக்கங்கள் முல்லைத்;தீவு வலயக் கல்வித் திணைக்களத்தையும் விட்டு வைக்கவில்லை. உருக்குலைந்து சின்னாபின்னமாகிப் போய்க் காணப்பட்ட வலயக்கல்வித் திணைக்களமானது இன்று புதுப்பொலிவுடன் திறந்து வைக்கப்படுகின்றது.

கல்வித்துறை சார்ந்த விடயங்களில் முன்னேறி வருகின்ற மாவட்டமாகவும் முல்லைத்தீவு மாவட்டம் காணப்படுகின்றது. கடந்த காலங்களில் போதிய வசதிகள் இல்லாத நிலையில், வலயக் கல்வித் திணைக்களம் இயங்கி வந்துள்ளது. இருந்தபோதும், முல்லைத்தீவு வலயக்கல்வி திணைக்களம் முன்னின்று தனது சேவையினை செய்துள்ளது.

இதேபோன்று பாடசாலைகளில் அதிபர்கள், ஆசிரியர்கள் தங்குமிட வசதிகள் இல்லாத நிலை காணப்படுகின்றது. அவற்றையும் பூர்த்தி செய்து வழங்கவேண்டிய தேவையுள்ளது என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X