2025 ஜூன் 30, திங்கட்கிழமை

மகளை துஷ்ப்பிரயோகம் செய்ய முயன்ற தந்தைக்கு விளக்கமறியல்

Thipaan   / 2015 டிசெம்பர் 02 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

16 வயதான தனது மகளை பாலியல் துஷ்ப்பிரயோகம் செய்யமுற்பட்ட தந்தையை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற  நீதவான் எம்.ஐ.வகாப்தீன், செவ்வாய்க்கிழமை (01) உத்தரவிட்டுள்ளார்.

கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் 16 வயதுச் சிறுமி ஒருவரை அவரது தந்தை பாலியல் துஷ்ப்பிரயோகம் செய்ய முற்பட்டதாக  கிளிநொச்சிப் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் இச்சம்பவத்துடன் தொடர்புபட்டதாக கருதப்படும் சந்தேக நபரான சிறுமியின் தந்தையை கைது செய்தனர்.

குறித்த சந்தேக நபரை கிளிநொச்சி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே எதிர்வரும் 15ஆம்திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X