2025 ஜூன் 30, திங்கட்கிழமை

மணற்குடியிருப்பு மதுபானசாலை ஆறுமாதங்களுக்கு அதே இடத்தில் இயங்கும்

George   / 2016 பெப்ரவரி 13 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு மணற்குடியிருப்பு மதுபானசாலையினை ஆறுமாதங்களுக்கு அதே இடத்தில் இயங்க அனுமதிப்பதாகவும் ஆறு மாதங்களுக்குப் பின்னர், பிறிதொரு இடத்தில் இயங்கவைப்பதென முடிவெடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மணற்குடியிருப்பு மதுபானசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில், மதுபானசாலை தொடர்பான கலந்துரையாடல் ஒன்று முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் தலைமையில் இன்று சனிக்கிழமை (13) மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில், வடமாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் அன்டனி ஜெகநாதன், முல்லைத்தீவு கடற்றொழிலாளர் சங்கங்களின் அந்தோனிப்பிள்ளை மரியராசா, மணற்குடியிருப்புக் கிராமத்தின் கிராம அபிவிருத்திச் சங்கம், மாதர் சங்கம், கடற்றொழில் சங்கம் என்பவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

மதுபானசாலை அமைப்பதற்கு கிராமத்தின் பொது அமைப்புகள் இணக்கம் தெரிவித்துள்ளதன் காரணமாக ஆறுமாதங்களுக்கு மதுபானசாலை அதேயிடத்தில் இயங்குவதெனவும், ஆறு மாதங்களின் பின்னர், பிறதொரு இடத்தில் மதுபானசாலையினை இயங்கவைப்பதெனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த இடத்தில் கடந்த ஜனவரி 23ஆம் திகதி தொடக்கம் மதுபானசாலை இயங்கத்தொடங்கியதன் பின்னர் பொது அமைப்புகள், வடமாகாண சபை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மதுபானசாலையினை மணற்குடியிருப்பில் இயங்கவேண்டாமென கோரிக்கை விடுத்த நிலையில், மாவட்டச் செயலாளரால் தற்காலிகமாக மூடப்பட்டது. இந்நிலையில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X