Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
George / 2017 ஏப்ரல் 18 , மு.ப. 09:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சியில் அனுமதிப்பத்திரமின்றி டிப்பர் வாகனத்தில் மணல் ஏற்றிய இரண்டு பேருக்கு தலா 1 இலட்சத்து இருபதாயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
டிப்பர் வாகனங்களையும் சந்தேக நபர்களையும், கிளிநொச்சிப் பொலிஸார், குறித்த கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் திங்கட்கிழமை ஆஜர்ப்படுத்தியபோது, நீதவான் ஏ.ஏ,ஆனந்தராஜா இந்த அபராதத்தை விதித்தார்.
அத்துடன், டிப்பரில் ஏற்றப்பட்டிருந்த மணலை அரசவுடமையாக்குமாறும், சாரதிகளை சமுதாயம்சார் சீர் திருத்த கட்டளைச்சட்டத்தின் கீழ், தலா பத்து நாட்கள் கட்டாய சமுக சேவையில் ஈடுபடுமாறும் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, அனுமதிப்பத்திரமின்றி உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றிச்சென்ற ஒருவருக்கு 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதுடன், மணல் பறிமுதல் செய்யப்பட்டு ஏழு நாட்கள் சமூக சேவையில் ஈடுபடுமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago