2025 ஜூன் 30, திங்கட்கிழமை

மதுபான விற்பனை நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது

Thipaan   / 2016 பெப்ரவரி 05 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு, மணற்குடியிருப்பில் இயங்கி வந்த மதுபான விற்பனை நிலையத்தை 4ஆம் திகதி முதல் தற்காலிகமாக மூடியுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் கரைதுறைபற்று பிரதேச செயலரினால் மணற்குடியிருப்பில் மதுபான விற்பனை நிலையம் அமைப்பது தொடர்பான மக்களின் கருத்தறியும் கூட்டமொன்று நடத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் கிராமத்தின் அபிவிருத்திச் சங்கம், மாதர் சங்கம், கடற்றொழில் சங்கம் என்பன மதுபான விற்பனை நிலையத்தை அமைக்கவேண்டாமென எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், கடந்த ஜனவரி 23 ஆம் திகதி தொடக்கம் மதுபான விற்பனை நிலையம் இயங்கியது. இதனையடுத்து, விற்பனை நிலையத்தை மூடுமாறு மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

மதுபான விற்பனை நிலையம் அமைந்திருக்கின்ற பகுதியில் ஆழிப்பேரலை நினைவுச் சின்னம், சிறுவர் பூங்கா, தனியார் கல்வி நிலையம், தேவாலயம் என பொதுவிடங்களை உள்ளடக்கி 110 குடும்பங்கள் வாழ்கின்ற பகுதியில் மதுவிற்பனை நிலையம் இயங்கத்தொடங்கியிருப்பது எதிர்காலத்தில் பெரும் பிரச்சனைகள் உருவாக்கும் என பொதுமக்களால் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, விற்பனை நிலையமானது 4ஆம் திகதி முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இக் கூட்டத்தில் இக்கிராமத்தின் அபிவிருத்திச் சங்கம், மாதர் சங்கம், கடற்றொழில் சங்கம் என்பன மதுபான விற்பனை நிலையத்தினை அமைக்கவேண்டாமென எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.

பின்னர் மதுபான விற்பனை நிலையத்தினை அமைப்பவர்களுக்கும் கிராமத்தின் பொது அமைப்புகளுக்குமிடையில், ஓர் இணக்கப்பாடு ஏற்பட்டு, அதனடிப்படையில் கடந்த 23ஆம் திகதி தொடக்கம் மதுபான விற்பனை நிலையம் இயங்க ஆரம்பித்திருப்பது தொடர்பாக சலசலப்புகள் ஏற்படத்தொடங்கியிருக்கின்றன.

மதுபான விற்பனை நிலையம் அமைந்திருக்கின்ற பகுதியில் ஆழிப்பேரலை நினைவுச் சின்னம், சிறுவர் பூங்கா, தனியார் கல்விநிலையம், தேவாலயம் என பொதுவிடங்களை உள்ளடக்கி 110 குடும்பங்கள் வாழ்கின்ற பகுதியில் மதுவிற்பனை நிலையம் இயங்கத்தொடங்கியிருப்பது எதிர்காலத்தில் பெரும் பிரச்சனைகள் உருவாக்குமென பொதுமக்களினால் கூறப்பட்டது.

இதனையடுத்து, மதுபான நிலையமானது மதுவரித் திணைக்களத்தால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X