2025 ஜூன் 30, திங்கட்கிழமை

மன்னார் நகர சபையின் முன்னாள் தலைவர் காலமானார்

Gavitha   / 2016 மே 15 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் நகர சபையின் முன்னாள் உப தலைவர் எஸ்.ஞானபிரகாசம், தனது 67ஆவது வயதில் காலமானார்.

திடீர் சுகயீனம் காரணமாக இன்று அதிகாலை மன்னார் பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இவர் உயிரிழந்துள்ளார்.

இவர், கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில், தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ கட்சியின் சார்பாக மன்னார் நகர சபைத்தேர்தலில் போட்டியிட்டு அதி கூடிய வாக்குகளைப் பெற்று, மன்னார் நகரசபையின் தலைவராக தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X