Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2016 ஜனவரி 29 , மு.ப. 06:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
எதிர்வரும் காலங்களில் மன்னார் மாவட்ட அபிவிருத்திகள் தொடர்பாக மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெறும் கூட்டங்களில் கலந்துகொள்ள தமக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என மாவட்ட மீனவ கூட்டுறவு சங்கங்களின் சமாசத் தலைவர் என்.எம்.ஆலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்கங்களின் சமாசத் தலைவர் என்.எம்.ஆலம், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரியவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில், '40 மீனவ கிராமங்கள் கொண்டதும் 32 மீனவ கூட்டுறவு சங்கங்களை தன்னகத்தே கொண்டுள்ள மாவட்டத்தில், மீனவர் நலன் சார்ந்த விடயங்களில் மிகவும் தீவிரமாக செயற்பட்டுவரும் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்கங்களின் சமாசம் என்பதனை தாங்கள் அறிவீர்கள்.
மாவட்ட அபிவிருத்தி மற்றும் மீனவர்களின் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பான கூட்டங்களுக்கு கடந்த காலங்களில் முன்னுரிமை அளிக்கப்பட்டு கௌரவமாக அழைப்பு விடுவிக்கப்பட்டன. இருந்தும், அண்மைக் காலங்களில் இந்த நடைமுறை பின்பற்றப்படுவதில்லை. இதனால், மீனவர்களின் பல தேவைகள், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் உரிய சபையில் தெரிவிப்பதற்கான வாய்ப்பும் இம்மீனவர்களுக்குக் கிடைப்பதில்லை.
குறிப்பாக, அபிவிருத்திக்குழு தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் கூட்டங்களில் இம்மீனவ சமூகமும் கலந்துகொண்டு தங்களது தேவைகளை கூறும் வாய்ப்பு வழங்கப்படாதது வருந்தத்தக்கது.
மன்னார் மாவட்டத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் ஏனைய தொழில் புரிபவர்களை விட அதிகம் என்பது தாங்கள் அறிந்ததே. எனவே, எதிர்காலத்தில் கூட்டுறவு சங்க சமாசத்துக்கு அதற்கான வாய்ப்பை வழங்கி உதவுமாறு தங்களை தயவுடன் கேட்டுக்கொள்கிறேன்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago