2025 ஜூன் 30, திங்கட்கிழமை

மன்னார் வந்தடைந்தார் ஆயர் வண. இராயப்பு ஜோசப்

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 09 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மார்க் ஆனந்த், எஸ்.றொசேரியன் லெம்பேட்

உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் சிங்கப்பூரில் மேலதிக சிகிச்சை பெற்று வந்த மன்னார் மறை மாவட்ட ஆயர் வணக்குத்துக்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகை, இன்று புதன்கிழமை (09) பிற்பகல் மன்னாரை வந்தடைந்தார்.

பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்தை நேற்று காலை வந்தடைந்த ஆயர், அங்கிருந்து விசேட உலங்குவானூர்தி மூலம் ஏ32 வீதியில் அமைந்தள்ள மன்னார் தள்ளாடி விமான தளத்தை வந்தடைந்தார்.

தள்ளாடி விமான தளத்தை வந்தடைந்த ஆயரை, மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அன்ரனி விக்ரடர் சோசை மற்றும் அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள், சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் ஆகியோர் வரவேற்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X