2025 மே 15, வியாழக்கிழமை

மன்னாரில் மஞ்சள் தூள் பதுக்கி வைத்து விற்பனை

Editorial   / 2020 ஓகஸ்ட் 17 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட் 

மன்னார் பஸார் பகுதியில் உள்ள சில வர்த்தக நிலையங்களில், மஞ்சள் தூள் பதுக்கி வைக்கப்பட்டு, அதிகூடிய விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

அதாவது, 100 கிராம் மஞ்சள் தூள் 350 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது.

அத்துடன், ஒரு கிலோகிராம் மஞ்சள் தூள் 3,500 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை, பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதேவேளை விற்பனை செய்யப்படும் மஞ்சள் தூளின் பெரும்பாலானவற்றில் கோதுமை மா மற்றும் அரிசி மா கலந்துள்ளமை, நுகர்வோர் விவகார அதிகார சபையால் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .