2026 மே 02, சனிக்கிழமை

மன்னார் புதைகுழியிலிருந்து இதுவரை 207 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

எஸ்.றொசேரியன் லெம்பேட்   / 2018 ஒக்டோபர் 30 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் சதொச விற்பனை நிலைய வளாகத்தில் இடம்பெற்று வரும் மனித எலும்புக்கூடுகள் அகழ்வுப் பணியில் நேற்று (29) வரை 207 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கடந்த மார்ச் மாதம் மன்னார் நகர் நுழைவாயில் பகுதியில் சதொச விற்பனை நிலைய கட்டுமானப்பணியின் போது அகழ்வு செய்யப்பட்ட மண்ணில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்களை தொடர்ந்து மன்னார் நீதிமன்றத்தின் அனுமதியுடன் தொடர்ச்சியாக மனித எலும்புக்கூடுகள் அகழ்வு செய்யும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

இதன்போது இதுவரை 207 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளின் இதுவரை  199 எலும்புக்கூடுகள் மனித புதைகுழியில் இருந்து வெளியில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .