2025 ஜூன் 30, திங்கட்கிழமை

மரக் குற்றிகள் கடத்திய வாகனம் குடைசாய்ந்தது: சாரதி தப்பியோட்டம்

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 07 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

பூநகரி அரசபுரம் காட்டுப்பகுதியில் இருந்து சட்டவிரோதமான முறையில் முதிரைக் குற்றிகளை கிளிநொச்சிக்கு கடத்திச் சென்ற கப் ரக வாகனம், பூநகரி செல்லியாத்தீவு வளையில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து பனை மரத்துடன் மோதி நேற்று புதன்கிழமை (06) குடைசாய்ந்ததாக பூநகரி பொலிஸார் தெரிவித்தனர்.

வாகனத்தைச் செலுத்தி வந்த சாரதி தப்பித்து ஓடியுள்ளதாகவும், வாகனத்திலிருந்து 10 முதிரை மரக்குற்றிகளைக் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு, சம்பந்தப்பட்டவர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகப் பொலிஸார் கூறினர்.  

மீள்குடியேற்றத்தின் பின்னர் பூநகரிப் பிரதேச செயலத்தில் நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில், பூநகரியின் முக்கொம்பன், ஜெயபுரம், கரியாலை நாகபடுவான் மற்றும் அரசபுரம் போன்ற காட்டுப்பகுதிகளில் காடழிப்பு நடைபெற்று மரங்கள் களவாக யாழ்ப்பாணத்துக்கும் பிறவிடங்களுக்கும் கொண்டு செல்லப்படுகின்றது என மக்கள் பிரதிநிதிகளால் கூறப்பட்டது.

சங்குப்பிட்டிப் பாலம் வழியாக விறகுகூட எடுத்துச்செல்ல முடியாத வகையில் இறுக்கமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளபோதும், தொடர்ச்சியாக பூநகரியின் காடழிப்பு நிகழ்ந்து கொண்டிருக்கின்றது என்பதற்கான ஆதாரமே நேற்றைய மரக்கடத்தல் அமைந்துள்ளது.

பூநகரிப் பிரதேச செயலர் பிரிவில் காடழிப்பு நடைபெற்றால் அவை தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்தவேண்டியது கிராம அபிவிருத்திச் சங்கங்களின் பொறுப்பாகும். 

பூநகரி முழுமையாக உவரடையாமல் தடுப்பதில் மரங்களின் பங்கு முக்கியமானது. மரங்கள் அழிக்கப்பட்டால் பூநகரி முழுமையாக உவரடைவதை தடுக்கமுடியாதென சூழலியலாளர்கள் கவலைத் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X