2025 ஜூன் 04, புதன்கிழமை

மல்லாவிக்கு அநுர விஜயம்

சண்முகம் தவசீலன்   / 2018 செப்டெம்பர் 03 , பி.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுகுமார திஸாநாயக்கக மல்லாவிக்கான  விஜயம் ஒன்றை இன்று மேற்கொண்டார்.

மக்கள் விடுதலை முன்னணியானது, நாட்டை காக்கும் நாட்டை கட்டி எழுப்பும் மக்கள் நல ஆட்சி என்ற தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் நடாத்திவரும் மக்கள் சந்திப்பு இன்று மல்லாவி அணிச்சியங்குளம் பொதுநோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் அநுகுமார திஸாநாயக்கக சிறப்புரை நிகழ்த்தினார்.

மக்கள் விடுதலை முன்னணியின் நேசன் தலைமையில் மல்லாவி அணிச்சியங்குளம் பொதுநோக்கு மண்டபத்தில் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினரும்  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளருமான இராமலிங்கம் சந்திரசேகரன்   உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .