2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

மீண்டும் மூண்டது முரண்பாடு

Editorial   / 2017 டிசெம்பர் 14 , பி.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட் 

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பாக, இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் தமிழீழ விடுதலை இயக்கத்துக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை, தோல்வியில் முடிவடைந்துள்ளதாகத் தெரியவருகின்றது. 

தமிழரசுக் கட்சிக்கும் தமிழீழ விடுதலை இயக்கத்துக்கும் இடையிலான சந்திப்பு, இலங்கை தமிழரசுக் கட்சி அலுவலகத்தில், நேற்று (13) மாலை இடம்பெற்றது. 

மன்னார் நகரசபையை டெலோவுக்கு வழங்கப்பட்ட போதும், அதனை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு வழங்கப்பட்ட வேண்டும் என்ற கோரிக்கைக்கு அமைவாக, இந்த அவசர சந்திப்பு இடம்பெற்றது. 

நீண்ட நேரமாகப் பேச்சு வார்த்தை இடம்பேற்ற போதும், மன்னார் நகரசபையின் ஆட்சி, இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு வழங்க வேண்டும் எனறக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.  

எனினும், குறித்த கோரிக்கையை தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) முற்று முழுதாக நிராகரித்ததோடு, டெலோவுக்கே வழங்க வேண்டும் எனக் கோரிக்கை முன்வைத்தது. இதனால், பேச்சுவார்த்தை, தீர்வின்றி நிறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .