2025 ஜூன் 04, புதன்கிழமை

முசலி பிரதேச சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியது

எஸ்.றொசேரியன் லெம்பேட்   / 2018 ஏப்ரல் 11 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

முசலி பிரதேச சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.

முசலி பிரதேச சபைக்கான தலைவர் மற்றும் உப தலைவர் தெரிவுகள்  இன்று  (11)  மாலை வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிரைஞ்சன் தலைமையில் இடம்பெற்றது. 
தலைவர், உபதலைவர் தெரிவுகள் ஆரம்பமாகி இறுதி வரை முசலி பிரதேச சபைக்கு வெளியில் கட்சி ஆதரவாளர்களுக்கு இடையில் தர்க்க நிலை ஏற்பட்டிருந்தது.
இதனையடுத்து பொலிஸாரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தலைவர், உபதலைவர் தெரிவுகள் இடம்பெற்றன.
குறிப்பிட்ட நேரத்திற்குள் 16 உறுப்பினர்களில் சுமார் 6 உறுப்பினர்கள் மாத்திரமே வருகை தந்திருந்தனர்.
இதனால் சபையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் வட மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சனால் சுமார் 30 நிமிடம் சபை செயற்பாடுகள் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
எனினும் குறித்த 30 நிமிடங்களுக்குள் ஏனைய 10 உறுப்பினர்களும் சமூகமளித்திருந்த நிலையில் முசலி பிரதேச சபைக்கான தலைவர்,உப தலைவர் தெரிவுகள் இடம்பெற்றது.
இதன் போது தலைவர் தெரிவிற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் அப்துல் கபூர் கலீபத் சுபியான் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஜே.ஈசான் ஆகியோரது பெயர் முன் மொழியப்பட்டதோடு பகிரங்க வாக்களிப்புக்கு சபையில் உள்ள 16 உறுப்பினர்களும் ஆதரவு வழங்கினர்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸை சேர்ந்த அப்துல் கபூர் கலீபத் சுபியான் 9 வாக்குகளையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸின் ஜே.ஈசான் 6 வாக்குகளையும் பெற்றதோடு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி உறுப்பினர் ஒருவர் வாக்களிக்காது நடுநிலை வகித்தார்.
அதிக வாக்குகளைப் பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸை சேர்ந்த அப்துல் கபூர் கலீபத்  சுபியான் முசலி பிரதேச சபையின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து முசலி பிரதேச சபைக்கான உப தலைவர் தெரிவு இடம் பெற்றது.
உப தலைவர் தெரிவுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரசை சேர்ந்த உறுப்பினர் முஹசின் றைசுதீன் மற்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்  பிலிப் சகாயநாதன் குஷரூஸ் ஆகிய இருவரது பெயர்களும் முன் மொழியப்பட்டது.
இதன் போது அனைத்து உறுப்பினர்களும் பகிரங்க வாக்களிப்பிற்கு ஆதரவு வழங்கிய நிலையில் பகிரங்க வாக்களிப்பு இடம் பெற்றது.
வாக்களிப்பின் போது அகில இலங்கை மக்கள் காங்கிரசை சேர்ந்த உறுப்பினர் முஹசின் றைசுதீன் 9 வாக்குகளையும், தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் பிலிப் சகாயநாதன் குஷரூஸ் 6 வாக்குகளையும் பெற்றதோடு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி உறுப்பினர் வாக்களிக்காது நடுநிலை வகித்தார்.
இதன் போது கூடிய வாக்குகளைப் பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரசை சேர்ந்த உறுப்பினர் முஹசின் றைசுதீன் முசலி பிரதேச சபையின் உப தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .