2025 மே 08, வியாழக்கிழமை

முல்லை வயோதிபர்களின் கவனத்துக்கு

Niroshini   / 2021 ஓகஸ்ட் 31 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

 

முல்லைத்தீவு மாவட்டத்தில், நடமாடும் சேவை மூலமான தடுப்புசி தேவைப்படும் 60 வயதுக்கு மேற்பட்ட வயோதிபர்கள், அந்தந்த உதவி பிரதேச செயலகங்கள் கிராம சேவையாளர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் மாவட்ட செயலகம் அல்லது முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகம் ஆகியவற்றுடன் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்த்தில், கடந்த வாரம் முதல் 60 வயதுக்கு மேற்பட்ட வயோதிபர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், ஊனமுற்றோர் மற்றும் பலவீனமானவர்களுக்கு இராணுவ வைத்திய படையினருடன் இணைந்து 57ஆவது, 59ஆவது, 64ஆவது,  66ஆவது மற்றும் 68ஆவது படைப்பிரிவுகளின் படையினர், நடமாடும் தடுப்பூசி வழங்கும் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X