2025 மே 07, புதன்கிழமை

முல்லைத்தீவில் 401 ரவைகளுடன் ஒருவர் கைது

Editorial   / 2021 ஒக்டோபர் 15 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 செ.கீதாஞ்சன்
 
முல்லைத்தீவு அம்பலவன் பொக்கணை பகுதியில், ரி.56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தக்கூடிய  401  ரவைகளை வீட்டில் வைத்திருந்த 40 வயதான குடும்பஸ்தர் ஒருவரை முல்லைத்தீவு பொலிஸார் நேற்றிரவு  கைதுசெய்துள்ளனர்.

 முல்லைத்தீவு பெருங்குற்றத்தடுப்பு பிரிவி பொலிஸாருக்கு குறித்த வீட்டில் கஞ்சா இருப்பதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதை தொடர்ந்து நேற்றிரவு (14)  அந்த வீட்டினை சோதனை செய்தபோது வீட்டு வளாகத்தில் ஒருதொகை துப்பாக்கி ரவைகளை மீட்டுள்ளார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் வயல் நிலத்தினை பண்படுத்தும் போது இந்த ரவைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து பொலிஸாருக்கு தகவல் எதுவும் வழங்கப்படாத நிலை வீட்டின் உரிமையாளரை பொலிஸார் கைதுசெய்துள்ளார்கள்
 
கைதுசெய்யப்பட்ட நபரை இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.
 
 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X