Editorial / 2020 செப்டெம்பர் 22 , பி.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக தொடர்ச்சியாக வீசிய கடும் காற்றால், 8 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், விளையாட்டு கழகமொன்றின் கட்டிடமும் சேதமடைந்துள்ளது.
இன்று (22) காலை 10 மணிவரை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினருக்குக் கிடைத்த புள்ளிவிவரத்தின் படியே, மாவட்டத்தில் 8 வீடுகளும் உடையார்கட்டு பகுதியில் உள்ள விளையாட்டு கழகக் கட்டிடமும் சேதமடைந்துள்ளன.
இதற்கமைய, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில், இரண்டு வீடுகளும் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில், 3 தற்காலிக வீடுகளும் துணுக்காய் பிரதேசத்திலும் ஒரு வீடும் பகுதியளவில் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
6 hours ago
7 hours ago
24 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
24 Mar 2026