2025 மே 15, வியாழக்கிழமை

முல்லைத்தீவில் கடும் காற்றால் 8 வீடுகள் சேதம்

Editorial   / 2020 செப்டெம்பர் 22 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக தொடர்ச்சியாக வீசிய கடும் காற்றால், 8 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், விளையாட்டு கழகமொன்றின் கட்டிடமும் சேதமடைந்துள்ளது.

இன்று ​(22) காலை 10 மணிவரை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினருக்குக் கிடைத்த புள்ளிவிவரத்தின் படியே, மாவட்டத்தில் 8 வீடுகளும் உடையார்கட்டு பகுதியில் உள்ள விளையாட்டு கழகக் கட்டிடமும் சேதமடைந்துள்ளன.

இதற்கமைய, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில், இரண்டு வீடுகளும் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில், 3 தற்காலிக வீடுகளும் துணுக்காய் பிரதேசத்திலும் ஒரு வீடும் பகுதியளவில் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .