2025 ஜூன் 04, புதன்கிழமை

மூன்று மாத காலப்பகுதிகளில் 841.2 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடு

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2018 ஏப்ரல் 03 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்திகளுக்கு கடந்த மூன்று மாத காலப்பகுதிகளில் 18 வரையான திணைக்களங்கள் அல்லது அமைச்சுக்கள் ஊடாக 841.2 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என மாவட்ட செயலக தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைவிட 2017ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சினூடாக ஆயிரத்து 267 மில்லியன் ரூபாய் கிடைக்கப்பெற்று அதன்மூலம் அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

அதேபோன்று தேசிய நல்லிணக்கத்துக்கும் ஒருமைப்பாட்டுக்குமான அமைச்சினூடாக 120 மில்லியன் ரூபாய், தேசிய ஒனோர் திட்டத்தின் மூலம் 104.8 மில்லியன் ரூபாய், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சினூடாக 87.5 மில்லியன் ரூபாய், உள்நாட்டலுவல்கள் அமைச்சினூடாக 85 மில்லியன் ரூபாய் நிதியும் சுகாதாரத்துறையினூடாக உலக வங்கி சுகாதாரத்துறைக்கான  அபிவிருத்திக்கான நிதியொதுக்கீடுகள் கிடைக்கப் பெற்று அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை சுகாதார அபிவிருத்திக்கு மத்திய அரசினால் 46 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு 36 மில்லியனுக்கான வேலைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று விவசாய அமைச்சினூடாக 17.88 மில்லியன் கிடைக்கப் பெற்றுள்ளதுடன், கடற்றொழில் அமைச்சு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம், கமநல அபிவிருத்தித் திணைக்களம், சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம், ஜனாதிபதி செயலகம், கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி என பல்வேறு திட்டங்கள் ஊடாக பல்வேறு அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக  மாவட்டச் செயலக புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .