2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

மேம்பாலம் அமைப்பதற்கு நிதி தேவை

Editorial   / 2018 ஒக்டோபர் 03 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, பாண்டியன்குளம் சிவபுரம் வீதியின்   தாழ்பாலத்துக்கு  பதிலாக மேம்பாலம் அமைப்பதற்கு 20 மில்லியன் ரூபாய் நிதி தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது

பாண்டியன்குளம், நட்டாங்கண்டல் ஆகிய பகுதிகளுக்கான பிரதான வீதியாகக் காணப்படும் சிவபுரம் பாண்டியன்குளம் வீதியில், சிவபுரம் ஆற்றில் காணப்படுகின்ற தாழ்பாலம் கடுமையாக சேதமடைந்து காணப்படுகின்றது.

இந்நிலையில் இதற்கான புதிய பாலத்தை அமைக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த பாலத்துக்கு பதிலாக மேம்பாலம் அமைப்பதற்கு கிட்டத்தட்ட 20 மில்லியன் ரூபாய்  நிதி தேவைப்படுவதாக மாந்தை கிழக்கு பிரதேச சபையால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .