2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 04 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் பொருளாதார வசதி அற்ற பாடசாலை மாணவர்கள் 400 பேருக்கு, ஒரு தொகுதி கற்றல் உபகரணங்களை மன்னார் புனர்வாழ்வு அமையம், ஞாயிற்றுக்கிழமை (03) வழங்கி வைத்தது.

மாந்தை மேற்குப் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் பொருளாதார வசதி அற்ற பாடசாலை மாணவர்கள் 400 பேர் தெரிவுசெய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

மாந்தை மேற்குப் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட அடம்பன் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வில் அப்பகுதியைச் சேர்ந்த 19 கிராம அலுவலகர் பிரிவுகளைச் சேர்ந்த 200 மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மேலும், இலுப்பைக்கடவை கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் 17 கிராம அலுவலகர் பிரிவுகளைச் சேர்ந்த 200 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மன்னார் புனர்வாழ்வு அமையத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன், தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் உப தலைவர் செல்வி சாந்தினி கஸ்மீர், செயலாளர் அமல்ராஜ் பெர்ணான்டோ, பொருளாளர் தோமஸ் மரியதாஸ் ஆகியோர் கலந்துகொண்டு தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வைபவ ரீதியாக வழங்கி வைத்தனர். 

குறித்த நிகழ்வுகளில் கிராம அலுவலகர்கள், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர், சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X