2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

யானையின் உடலம் மீட்பு.

Niroshini   / 2021 ஜூலை 29 , பி.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா - மடுகந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குள பகுதியில், காயமடைந்த நிலையில் காட்டு யானையின் உடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த கிராமத்தில் வேட்டைக்கு சென்றவர்கள் பயன்படுத்திய வெங்காய வெடி வெடித்ததனாலேயே, இந்த யானை இறந்துள்ளதாக, பிரேத பரிசோதனை மேற்கொண்ட வடக்கு மாகாணத்தின் கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர் பி.கிரிதரன் தெரிவித்துள்ளார்.

ஐந்து வயது மதிக்கத்தக்க இந்த யானையின் உயிரிழப்பு தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களும் வன பாதுகாப்புத் துறையினரும் ஆராய்ந்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .