Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2016 ஏப்ரல் 04 , மு.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார்-தாராபுரம் பிரதான வீதி 4ஆம் கட்டை பகுதியில் ரயிலில் மோதி, மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞன், இன்று திங்கட்கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளார்.
கொழும்பில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த ரயிலில் மோதியே குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.
மன்னார் பெரியமடு கிராமத்தைச் சேர்ந்த அபுல் ஹசன் (வயது 34) என்பவரே உயிரிழந்துள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு வந்த மன்னார் பொலிஸார் சடலத்தை மீட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
மனநலம் பாதிக்கப்பட்டஇளைஞன், மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில கடந்த வெள்ளிக்கிழமை வீடு திரும்பியதாக மன்னார் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையிலே, ரயிலில்; மோதி குறித்த இளைஞன் பலியாகியுள்ளார். மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago