2025 ஜூன் 30, திங்கட்கிழமை

விசுவமடுப் பொதுச்சந்தை விரைவில் திறக்கப்படும்

Kogilavani   / 2015 டிசெம்பர் 02 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, விசுவமடு பகுதியில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் 9 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வரும் பொதுசந்தையானது விரைவில் வர்த்தகர்களிடம் கையளிக்கப்படும் என பிரதேச சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.

விசுவமடுப் பொதுச் சந்தையானது கடந்த 5 வருடங்களாக நிரந்தரக் கட்டடமின்றி இயங்கி வந்தது. இந்தச் சந்தைக்கு நிரந்தரக் கட்டடம் அமைப்பதற்காக சபையால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கட்டடப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கட்டடப் பணிகள் இவ்வருட இறுதிக்குள் முடிவடையும் என எதிர்பார்ப்பதாகவும் முடிவடைந்தால் சந்தை வர்த்தகர்களிடம் கையளிக்கப்படும் எனவும் பிரதேச சபை தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X