2025 ஜூன் 30, திங்கட்கிழமை

வீட்டுத்திட்ட கடன்கள் முடிவடைந்த பயனாளிகளுக்கு உறுதிகள் கையளிப்பு

Menaka Mookandi   / 2016 ஜனவரி 01 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

தேசிய வீடமைப்பு அதிகார சபையால் வீட்டுத்திட்டத்துக்கு வழங்கப்பட், கடன்களை செலுத்தி முடித்த 30 பயனாளிகளின் காணி உறுதிப்பத்திரங்களை மீண்டும் அவர்களிடம் வழங்கும் நிகழ்வு கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை (01) நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 60 பயனாளிகளுக்கு கடந்த 1980 ஆம் ஆண்டு வீடு அமைப்பதற்கான கடன் வழங்கப்பட்டது. அதில் கடனை செலுத்தி முடித்த 30 பயனாளிகளுக்கு இன்று காணி உறுதிகள் வழங்கப்பட்டன.

கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கிளிநொச்சி மாவட்ட முகாமையாளர் நோயல் ஜெயச்சந்திரன் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X