2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீச்சு

George   / 2016 ஜூன் 03 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா பத்தினியார் மகிழங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது, இனந்தெரியாதோரால் பெற்றோல் குண்டுத்தாக்குதல் வியாழக்கிழமை இரவு நடத்தப்பட்டுள்ளது.

நேற்று இரவு கறுப்பு நிற மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத மூன்று நபர்கள், குறிப்பிட்ட வீட்டின் மீது பெற்றோல் குண்டினை வீசிவிட்டு சென்றுள்ளதாக தெரியவருகிறது.

இந்த சம்பவத்தில் எவருக்கும் ஆபத்து ஏற்படவில்லை எனவும் தாக்குதலுக்குள்ளான வீட்டில் வசித்துவரும் பெண்ணின் கணவர், கடந்த பல ஆண்டுகளாக பிரிந்து வாழ்வதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .