2025 ஜூன் 30, திங்கட்கிழமை

வைத்தியர்களை நியமிக்குமாறு அடம்பன் மக்கள் ஆர்ப்பாட்டம்

Gavitha   / 2015 நவம்பர் 25 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரொமேஸ் மதுசங்க, மார்க் ஆனந்த்  

மன்னார், அடம்பன்  மாவட்ட வைத்தியசாலையில் வைத்தியர்கள் பற்றாக்குறை நிலவுகின்றமையால் தாம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதாகவும் தேவையான வைத்தியர்களை நியமிக்குமாறு கோரி அடம்பன் பகுதி மக்கள், நேற்று செவ்வாய்க்கிழமை(24) அந்த வைத்தியசாலைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த வைத்தியசாலைக்கென 6 வைத்தியர்கள் ஆரம்பத்தில் நியமிக்கப்பட்டிருந்த போதிலும், தற்போது ஒரு வைத்தியரே உள்ளதாகவும் அவர், பகல் வேளைகளில் மாத்திரம் பணியாற்றுகின்றமையினால் இரவு வேளைகளில் வரும் நோயாளர்களை 50 கிலோமீற்றருக்கு அப்பால் உள்ள மன்னார் போதனா வைத்தியசாலைக்கு செல்லவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

இப்பிரச்சினைக்கு உரிய அதிகாரிகளும் அரசாங்கமும் வெகுவிரைவில் தீர்வினைப் பெற்றுத்தர வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன்போது, ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்துக்கு வந்த,  மன்னார் பிரதேச செயலாளர் ஸ்ரீஸ்கந்தராஜாவிடம் ஆர்ப்பாட்டக்காரர்கள் மகஜரொன்றையும் கையளித்தனர்.

அதனையடுத்து, இந்தப் பிரச்சினை தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சருக்கு அறிவித்து, வைத்தியர்களை பெற்றுக்கொடுக்க விரைவில் நடவடிக்கை எடுப்பதாக பிரதேச செயலாளர், ஆர்ப்பாட்டக்காரர்களிடம் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X