Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2016 செப்டெம்பர் 10 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி, முரசுமோட்டை வீதியில் இன்று சனிக்கிழமை (10) இடம்பெற்ற வீதி விபத்தில் கண்ணிவெடியகற்றும் இரு பெண்கள் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சிப் பொலிஸார் தெரிவித்தனர்.
பரந்தனில் இருந்து புளியம்பொக்கணை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளும் புளியம்பொக்கணையிலிருந்து பரந்தன் நோக்கிச் சென்ற காரும் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இரு பெண்களும் படுகாயமடைந்துள்ளனர்.
உழவனூர் பகுதியைச் சேர்ந்த பா.நிதர்சினி (வயது 25), நா.ஜெகதீஸ்வரி (வயது 32) ஆகிய இருவருமே படுகாயங்களுக்குள்ளாகினர்.
மேலதிக விசாரணைகள் கிளிநொச்சிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
49 minute ago