Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2016 பெப்ரவரி 15 , மு.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
ஏ-35 வீதியில் திங்கட்கிழமை (15) இடம்பெற்ற வாகன விபத்தில் முன்பள்ளி ஆசிரியை ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
கிளிநொச்சி ஏ-35 வீதியின் விசுவமடு 12ஆம் கட்டைப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிவில் பாதுகாப்பு திணைக்கள முன்பள்ளி ஆசிரியையான கிளிநொச்சி ஆனந்தபுரத்தைச் சேர்ந்த சிவபாலன் கஸ்தூரி என்பவரே உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சியில் இடம்பெற்ற சிவில் பாதுகாப்பு திணைக்கள முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்துரையாடலில் கலந்து கொண்டுவிட்டு திரும்பிக்கொண்டிருந்தபோது கெப் ரக வாகனம் ஒன்றுடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
சடலம் தற்போது கிளிநொச்சி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago